News April 2, 2025

விபத்தில் பலியான 4 போலீஸார் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்

image

சாலை விபத்துகளில் பலியான 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மெர்ஸி உள்ளிட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் இது பேரிழப்பு எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த நல்லகண்ணு!

image

சுதந்திர போராட்டத்தோடு ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமைக்கான போராட்டங்களை தமிழகம் முழுவதும் முன்னெடுத்தவர். நாங்குநேரியில் கோயில் நுழைவு போராட்டத்தை நல்லகண்ணு முன்னின்று நடத்தினார். குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறான கடனா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். TN அரசு கட்டிய அணையால் இன்று அப்பகுதி விவசாயத்தில் செழித்து காணப்படுகிறது.

News February 25, 2026

நல்லகண்ணு கடந்து வந்த பாதை

image

நல்லகண்ணு 26.12.1925 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு பலவேசம் என்ற ஆசிரியர் பொதுவுடமை கருத்துக்களை அறிமுகம் செய்தார். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு, 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கட்சியில் பயணம் செய்தவர்.

News February 25, 2026

BREAKING: நல்லகண்ணு காலமானார்

image

சுதந்திரப் போராட்ட வீரரும், CPI மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல் நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த 15 நாள்களாக சென்னை ராஜீவ் காந்தி GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழக அரசியலில் பொதுவுடமையின் இலக்கணமாக திகழ்ந்த அவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!