News April 2, 2025

தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகம்

image

2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444

Similar News

News August 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 28, 2025

விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

image

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

மோடி கங்கை நீர், ராகுல் ஊழல் குடும்பம்: பாஜக விமர்சனம்

image

குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல, அது வாக்குறுதிப்படி மாடல் என ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுபற்றி பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, மோடி கங்கை நீர் போன்று புனிதமானவர், ஆனால் ராகுல் காந்தியின் குடும்பம் ஊழல், பொய்கள் நிறைந்த குடும்பம் என சாடினார். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!