News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹6,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாடு இல்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் ₹6,000 முதல் ₹6,500 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஹோட்டல் பில்லுடன் <<19368805>>கேஸ் கட்டணமும்<<>> சேர்க்கப்படும் நிலையில், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 13, 2026
IPL 2026: ரூல்ஸை மாற்றிய BCCI!

2026 IPL சீசனுக்கு முன்பாக, அணிகளின் பயிற்சிக்கு BCCI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது *ஒரு அணி பயிற்சி செய்த ஆடுகளத்தில் மற்றோர் அணி பயிற்சி செய்யக் கூடாது *ஒவ்வொரு அணியும் தனி ஆடுகளத்தில்தான் பயிற்சி செய்ய வேண்டும் *அதிகபட்சமாக 2 பயிற்சி போட்டிகளை விளையாடலாம் *மின் விளக்குகள் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது *பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
News March 13, 2026
சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. ஏ.எம்.மூர்த்தி கைது

₹25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தியை ED கைது செய்துள்ளது. கடந்த 2 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இக்கட்சி திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் மூர்த்தி கலந்துகொண்டார்.


