News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News January 14, 2026
‘ஜனநாயகன்’ சரியான நேரத்தில் வெளியாகும்: கார்த்தி

‘ஜனநாயகன்’ படம் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் தொடங்கி தற்போதைய ‘வா வாத்தியார்’ வரையிலும் பல தடங்கலை கடந்தே படங்கள் வெளியாவதாகவும், ஒரு நல்ல கதை தனக்கு தேவையானதை தானே அமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, நமது கட்டுப்பாட்டில் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.
News January 14, 2026
உதவ ஓடிவந்த டிரம்ப்பை கண்டித்த ரஷ்யா

ஈரானில் போராடுபவர்களுக்கு உதவிகள் தயாராக இருப்பதாக <<18850743>>டிரம்ப்<<>> தெரிவித்ததை ரஷ்யா கண்டித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அமெரிக்கா நாசவேலைகளை செய்ய முயற்சிப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்டு நடக்கும் போராட்டத்தை, அமெரிக்கா தனக்கு சாதமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.


