News April 1, 2025
PF ஆட்டோ செட்டில்மென்ட் ரூ.5 லட்சமாக உயருகிறது

மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News October 23, 2025
ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இவ்வளவு வசூலா?

கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறும் பதிவுக்கு, பிரபலங்கள் கோடியில் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு பதிவும், உலகளாவிய விளம்பரமாக உள்ளது. எந்த பிரபலம், எவ்வளவு பெறுகிறார், என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் யாரை பாலோ செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 23, 2025
நகை கடன் வாங்கியோருக்கு… முக்கிய தகவல்

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
News October 23, 2025
ஆந்திர அரிசி இறக்குமதி: சீமான்

தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா என்றும் சாடிய அவர், முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.