News April 1, 2025

நத்தம் இன்று முதல் கட்டண உயர்வு 

image

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் திண்டுக்கல், நத்தம் அருகே மதுரை- நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதூர் சுங்கச்சாவடி இன்று (ஏப்.1)முதல் இந்த கட்டணம் உயர்வு அமலானது.

Similar News

News February 5, 2026

திண்டுக்கல்: BSNL-ல் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech Electronics & Telecommunication படித்த 21-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் மார்ச்.7-ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க

News February 5, 2026

நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள்வெட்டு

image

நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெகன் மீண்டும் முன்விரோதம் காரணமாக விஜயாவை தலையில் அரிவாளால் வெட்டியும், ராமனை கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ராமன் அளித்த புகாரில் ஜெகன் மற்றும் பிரபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 5, 2026

திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!