News March 31, 2025
சிறாரை பணியில் அமர்த்தலாமா? கூடாதா?

சிறாரை பணியில் அமர்த்தினால் அளிக்கப்படும் தண்டனை குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 95ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சிறாரை பணியில் அமர்த்துவோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவர முடியாத குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
H.ராஜா உடல்நிலை.. முக்கிய அப்டேட்

பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நல்ல முறையில் H.ராஜாவின் உடல்நலன் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த நயினார், வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பணிக்கு திரும்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
விஜய்யிடம் இன்ஜினே இல்லை: அண்ணாமலை

NDA கூட்டணியை பற்றி விமர்சிக்கும் விஜய்யால், முதலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களிடம் டபுள் இன்ஜின் இருப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, விஜய்யிடம் இதுவரை இன்ஜினே பார்க்க முடியவில்லை எனக் கூறினார். மேலும், தன்னிடம் வண்டி, இன்ஜின், சேஸ், ஊற்றுவதற்கு பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லாமல் விஜய் பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
News February 4, 2026
ஹிந்தி திணிப்பால் இவற்றை காணவில்லை: PTR

பழமையான மொழிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பித்து கொண்டே இருக்க வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகம் விழாவில் பேசிய அவர், ஹிந்தி மொழி எங்கெல்லாம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பழமையான மொழிகள் காணாமல் போவதாக கூறியுள்ளார். மேலும், பழமையான மொழிகளை சிறப்பித்தால் மட்டுமே அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றார்.


