News March 30, 2025
என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.
Similar News
News January 17, 2026
19 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற வீரர்

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்து, ₹8 லட்சம் மதிப்பிலான காரை தட்டிச் சென்றார். பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி, 2-வது இடத்தை பிடித்து பைக் பரிசு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
SPONSOR-களைத் தேடுவது ஏன்? அஜித்தின் விளக்கம்

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடித்தது பேசுபொருளானது. இதனிடையே SPONSOR-களை தேடுவது குறித்த அவரது பேட்டி வைரலாகியுள்ளது. அதில் சொத்து சேர்க்க SPONSORகளை தேடவில்லை என்றும், ரேஸ் டிரைவர்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள் எனப் பலரின் நன்மைகளை கருத்தில்கொண்டு SPONSOR-க்காக பல கதவுகளை தட்டி வருவதாக விளக்கமளித்துள்ளார்.
News January 17, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் படுகுஷியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.


