News March 30, 2025
என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.
Similar News
News April 14, 2026
மோனாலிசா திருமணத்தால் கேரள CPM-க்கு சிக்கல்!

கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசாவின் திருமணத்தை நடத்தி வைத்த கேரள மாநில CPM நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மோனாலிசா 16 வயது மைனர் என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவரை கரம்பிடித்த ஃபர்மான் மீது <<19617280>>வழக்கு <<>>பதிவானது. இந்நிலையில் திருமணத்தை முன்னின்று நடத்திய கேரள மாநில CPM செயலாளர் கோவிந்தன், அமைச்சர் சிவன்குட்டி ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News April 14, 2026
வீடியோ காலில் அந்தரங்கம்.. அலறிய இளம்பெண்!

இரவில் Unknown நம்பரிலிருந்து வந்த வீடியோ காலில் ஒருவர் ஆடையின்றி பேசியதால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அலறியடித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தப்படுகிறது. முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து இரவில் மட்டுமல்ல எப்போது வீடியோ கால் அழைப்புகள் வந்தாலும் எடுக்க வேண்டாம். அது உங்களை சைபர் கிரைம் வலையில் வீழ்த்தும் மோசடி என்பதால் உஷாராக இருங்கள். BE ALERT!
News April 14, 2026
இந்த நாடுகள்ல தனி ராணுவம் கிடையாதா!

➤ஐஸ்லாந்தில் நிலையான ராணுவம் இல்லை. NATO உறுப்பினர் என்பதால், தேவைப்பட்டால் USA பாதுகாப்பு வழங்கும் ➤லிச்சென்ஸ்டீன் அரசு செலவுகள் அதிகமானதால் 1868-ல் ராணுவத்தை ஒழித்தது. அடிப்படை பாதுகாப்பிற்காக சில காவலர்கள் மட்டுமே உள்ளனர் ➤வாடிகனில் ராணுவம் இல்லை. போப்பாண்டவரை பாதுகாக்க சுவிஸ் காவலர்கள் மட்டுமே உள்ளனர் ➤அன்டோராவில் ராணுவம் இல்லாததால், பாதுகாப்பை ஸ்பெயினும், ஃபிரான்சும் பகிர்ந்து கொள்கின்றன.


