News March 29, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மரில் இன்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை அடுத்தடுத்து (7.7 & 6.4) நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் காட்சிகள் காண்போரைக் கண்கலங்க வைக்கிறது.
Similar News
News April 2, 2025
இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.. Apply Now

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
உங்கள் SBI கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதா?

SBI வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையில் நேற்று திடீர் தடங்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பை சந்தித்தனர். இதனிடையே வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். பணம் இன்னும் வரவு வைக்கப்படாததால் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என பலர் முறையிட்டுள்ளனர். இதற்கு எஸ்பிஐ இன்னும் பதிலளிக்கவில்லை. நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்திருக்கிறீர்களா?
News April 2, 2025
மியான்மரை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மியான்மர், தாய்லாந்து போல் பாகிஸ்தானில் பெரும் சேதம் இல்லை. உயிரிழப்புகள் பற்றி இதுவரை அரசு சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.