News March 29, 2025

ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

image

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News February 24, 2026

BREAKING: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாற்றம்

image

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (பிப்.24) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 24, 2026

செங்கை: தூக்கில் தொங்கிய பெண்!

image

ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் உமா ( 42). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய உமாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

News February 24, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!