News March 16, 2025

மனிதரை கல்லாக்கும் கோயில்?

image

ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தில் உள்ள கிரடு கோயிலுக்கு இரவில் யாரும் வருவதோ, தங்குவதோ இல்லை. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் முனிவர் ஒருவர் சீடர்களுடன் வந்ததாகவும், சீடர்கள் உடல்நிலை பாதித்தபோது உதவாத கிராமத்தினரை இரவில் கல்லாகிவிடுவர் என சாபமிட்டதாகவும், ஒரு பெண் கல்லானதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சமே இரவில் யாரும் அங்கு வராததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Similar News

News July 5, 2025

தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

image

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2025

சஞ்சு சாம்சனுக்கு டிமாண்ட்? KCL ஏலத்தில் அதிர்ச்சி

image

கேரளா கிரிக்கெட் லீக் சீசன் 2, ஆக.21 – செப்.6 வரை நடைபெறவுள்ளது. 6 அணிகள் இந்த டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், இதற்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், சஞ்சு சாம்சனை ₹26.8 லட்சத்துக்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆனால் இந்த ஏலத்தில் ஒரு அணி ₹50 லட்சம் மட்டுமே செலவிட முடியும். இதன் மூலம் பாதிக்கு மேலான ஏல செலவினத் தொகையில் சஞ்சு எடுக்கப்பட்டுள்ளார்.

News July 5, 2025

மயக்கமடைந்த ஏர் இந்தியா பைலட்: பதறிய பயணிகள்!

image

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா- AI2414 விமானத்தின் பைலட் திடீரென மயக்கமடைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. பைலட் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். பைலட் இல்லாததையடுத்து Co-pilot விமானத்தை இயக்கினார். இந்த பதற்றத்தின் காரணமாக, விமானம் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

error: Content is protected !!