News March 16, 2025

சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. போக்சோவில் பெண் கைது

image

கேரளாவில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது செய்தது. சிறுமியின் செயலில் வித்தியாசம் இருப்பதை பள்ளியில் ஆசிரியைகள் கவனித்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது, 23 வயது ஸ்நேகா மெர்லின், மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் உள்ளது.

Similar News

News March 16, 2025

நடிகை சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட்

image

நடிகை சமந்தா மீண்டும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. மயோசிடிஸ் நோயால் அவதியுற்று வரும் சமந்தா, அவ்வப்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது போன்ற போட்டோவை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் கவலையுற்ற ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

News March 16, 2025

துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (1/2)

image

மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது, 16ஆவது மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை (அதிமுக) பதவி வகித்தார். பின்னர் 17ஆவது மக்களவை சபாநாயகர் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வழக்கத்தை மத்திய அரசு கைவிட்டது. 18ஆவது மக்களவையிலும் இதே பிரச்னை நீடித்ததால், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை.

News March 16, 2025

துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (2/2)

image

சபாநாயகர் இல்லாத நேரத்தில் மக்களவையை வழிநடத்த வேண்டியது துணை சபாநாயகர் கடமை. அது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி. சபாநாயகருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கும் உண்டு. ஆனால் கடந்த 2 மக்களவையிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அரசியலமைப்பு சட்டத்தின் 93ஆவது பிரிவை மீறும் செயலாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!