News March 4, 2025
சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
Similar News
News January 9, 2026
வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) மார்ச் (அ) ஏப்ரலில் வழங்கப்பட உள்ளது. இதன் பயனாளிகள் e-KYC அப்டேட் செய்வது கட்டாயம். அதன்படி, PM KISAN, Aadhaar Face RD ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும். பின், PM KISAN ஆப்பில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து LOG IN செய்ய வேண்டும். அதில், beneficiary status page சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் e-KYC அப்டேட் செய்யப்படும். SHARE
News January 9, 2026
விஜய் மவுனமாக இருப்பது ஏன்?

சென்சார் பிரச்னையால் ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. இப்போதைய சூழலில், <<18809821>>ஜன.21 வரை<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவிற்கு சிக்கல் உள்ளது. ஆனால், இந்த பிரச்னை தொடர்பாக விஜய் இதுவரை அறிக்கையோ, சோஷியல் மீடியா பதிவோ எதுவுமே வெளியிடவில்லை. கோர்ட்டுக்கு சென்றதும்கூட தயாரிப்பு நிறுவனமே. ‘ஜனநாயகன்’ பட பிரச்னையில் விஜய்யின் மவுனத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?
News January 9, 2026
இனி யாரும் வாய் திறக்கக் கூடாது: செல்வப்பெருந்தகை

கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள் சிலர் பேசியது திமுக-காங்., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் எவரும் பேச வேண்டாம் என செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றால், அது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான் பலன் எனவும், அதனை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


