News February 22, 2025
இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News February 23, 2025
மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருந்தால்…

மருந்து அட்டைகளில் இருக்கும் இந்த குறியீடு மிகவும் முக்கியமானது. சிவப்பு கோடு இருக்கும் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளவே கூடாது என மத்திய அமைச்சகம் அறிவுறுத்துகிறது. இந்த சிவப்பு கோடு, Antibiotics மருந்துகளில் காணப்படும். ஆகவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
News February 23, 2025
நாதகவில் மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலைமை சரியாக இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து பலரும் விலகி வரும் நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News February 23, 2025
மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னையில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் இந்தி கவிதையை சரியாக சொல்லாததால், அவரை இந்தி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தினாலே இப்ப பிரச்னை தான்!