News February 16, 2025

35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

image

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 15, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இன்று தனது வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டரை‌ பதிவு செய்ய அரசு ஒதுக்கிய எண்களை மட்டும் தொடர்பு கொள்ளவும் வேறு எந்த இணைப்பையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் OTPகளை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

கிருஷ்ணகிரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!