News March 29, 2024

செந்தில் பாலாஜியைக் கண்டு பயந்த அண்ணாமலை?

image

செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் கரூரில் போட்டியிடாமல், கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக கனிமொழி கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், “அண்ணாமலை பொய் மட்டுமே பேசி வருகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அவர் வெளியே வந்து விடுவார்” என்றார்.

Similar News

News October 29, 2025

‘பாபர் மசூதி கட்டப்படும்’: FB-ல் பதிவிட்ட வழக்கில் திருப்பம்

image

‘மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்’ என்று சட்டக்கல்லூரி மாணவர், 2020-ல் FB-ல் பதிவிட்டிருந்தார். இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவர் தரப்பில், SC-ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கோர்ட், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி கோர்ட், இந்த வழக்கை தனது சொந்த விருப்பத்தின் பேரில் பரிசீலிக்கலாம் என்றும் SC அறிவுறுத்தியுள்ளது.

News October 29, 2025

சொகுசு ரயில்களில் பயணம் செய்ய எவ்வளவு தெரியுமா?

image

இந்தியாவின் சொகுசு ரயில்கள் சுற்றுலாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தையும், இயற்கை அழகையும் வெளிப்படுத்தும் வகையில் பயண அனுபவங்களை வழங்குகின்றன. இந்த ரயில்களில், பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு, ஒருவார பயணமாக சென்றுவரலாம். எந்த ரயில்களில், எவ்வளவு கட்டணம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News October 29, 2025

இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய NDA: ராகுல் காந்தி

image

பிஹார் இளைஞர்களின் கனவு & ஆசைகளை மோடி, நிதிஷ்குமார் தலைமையிலான NDA கூட்டணி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிஹார் எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் பின்தங்கியே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி – நிதிஷ் இணைந்து நாசமாக்கியதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!