News March 28, 2024

4% நிறுவனங்கள் மட்டுமே இதை சமாளிக்க முடியும்

image

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்களை சமாளிக்க 5%க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டும் தயாராக இருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. சுமார் 1,000 தனியார் நிறுவன தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 59% நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உலகளவில் 3% நிறுவனங்கள் மட்டுமே சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

Similar News

News February 10, 2026

பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: காங்.,

image

மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய உயரிய அமைப்பாக உள்ள நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்துவதாக கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார். மாபெரும் தொகைகளை சேகரித்த மர்மமான PM CARES நிதி தொடர்பான கேள்விகளுக்கு, அவையிலேயே பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த நிதியின் விவரங்கள் குறித்து பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்தார்… திமுக அதிர்ச்சி

image

திமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவோ கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. நெல்லை, குமரி பகுதிகளில் வலுவாக இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R.தனபாலன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

மதுரையில் 10 தொகுதிகளில் வெற்றிபெற பிடிஆர் ஐடியா

image

2026-ல் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றிபெற, கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் பிடிஆர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரை சிறப்பாக செய்தால் மட்டும் வெற்றிக்கு போதும் என நினைக்கக்கூடாது; வாக்கெடுப்பு அன்று தான் மிக தெளிவாக பணி செய்ய வேண்டும். பரப்புரை எந்த அளவுக்கு முக்கியமோ, வாக்கெடுப்பு அன்று கவனமாக செயல்பட்டால் 10 தொகுதியிலும் எளிதாக வெற்றிபெற முடியும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!