News March 28, 2024
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 93 பணியிடங்களுக்காக குரூப்-1 தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News February 6, 2026
தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
News February 6, 2026
பாஸ்வேர்டுகளை AutoFill செய்கிறீர்களா?

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றில் உள்நுழையும்போது பாஸ்வோர்டை AutoFill செய்பவரா? நீங்கள் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஹைதராபாத்தின் ஆராய்ச்சியில், இப்படி AutoFill செய்வது செக்யூரிட்டி வேலையை குறைக்கிறதாம். இதனால், உங்களின் போன் சைபர் கிரிமினல்கள் ஈசியாக ஹேக் செய்யப்பட்டு விடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இனி உங்களின் அனைத்து பாஸ்வோர்டுகளையும் டைப் செய்யுங்கள். SHARE IT.
News February 6, 2026
விஜய்யால் விரக்தியில் தவெகவினர்?

கட்சியில் எந்த பணியும் முழுமையாக நடக்கவில்லை என தவெகவினர் குமுறுவதாக கூறப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடு நடக்கும் என கூறியதோடு சரி, அதை நடத்தவில்லை, மக்களிடம் வாங்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் உள்ளன, திங்கள்தோறும் நிர்வாகிகளை தலைவர் சந்திப்பார் என கூறப்பட்டது ஆனால் சந்திக்கவில்லை, சுற்றுப்பயணமும் சரிவர நடக்கவில்லை என நிர்வாகிகள் சிலர் விரக்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.


