News March 28, 2024

தலையில் இடி விழுந்ததை போல் உள்ளது

image

எம்.பி.சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கணேசமூர்த்தியின் மறைவு தலையில் பெரிய இடி விழுந்ததை போல் உள்ளதாக உருக்கமாக கூறிய அவர், சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், 2 சீட் கொடுத்தால் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு அவர் தெரிவித்திருந்ததாகவும் விளக்கமளித்தார்.

Similar News

News March 7, 2026

சுந்தர் பிச்சைக்கு ₹6,361 கோடி சம்பளம்!

image

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு $692 மில்லியன் (₹6,361 கோடி) சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 2004-ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆக பதவியேற்றார். அதன்பிறகு கூகுள் சந்தை மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது. தற்போது AI தொழில்நுட்ப போட்டியிலும் கூகுள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

News March 7, 2026

விவாகரத்து பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்: விஜய்

image

முதல்முறையாக விவகாரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் பேசியுள்ளார். ஏற்கெனவே உள்ள நிறைய பிரச்னைகளில் சமீபத்தில் மேலும் ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்கள் போராடி வருத்தப்படுவதை பார்த்து நானும் வருந்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நல்லதே நடக்கும் என்றும் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் விஜய் பேசினார்.

News March 7, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

image

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!