News March 27, 2024
இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்

தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டில் 64,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 7 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Similar News
News October 30, 2025
டெங்குவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: EPS

TN-ல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். டெங்கு எதிரொலியாக TN முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று X-ல் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 30, 2025
₹441 லட்சம் கோடி.. உலகின் NO.1 நிறுவனமான Nvidia

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.
News October 30, 2025
‘விக்ரம் 63’ படத்தை இயக்கும் குறும்பட இயக்குநர்

‘விக்ரம் 63’ படத்தை ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற அறிமுக இயக்குநர் தான் விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரியும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


