News March 27, 2024

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடி பறிமுதல்

image

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேப்ரிகார்னியன் ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வளாகம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் E.D. சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வாஷிங் மெஷினுக்குள் இருந்த கணக்கில் வராத ரூ.2.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 47 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

Similar News

News April 9, 2026

கோடை மழை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

image

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் அடுத்த 1 வாரத்திற்கு குடையை மறக்காதீங்க! SHARE IT

News April 9, 2026

ஆன்ட்டி என அழைத்தவருக்கு ₹1.8 லட்சம் அபராதம்

image

லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இல்டா எஸ்டீவ்ஸ் (61) நர்ஸாக பணியாற்றுகிறார். அங்கு சக ஊழியர் ஒருவர், பலமுறை கூறியும் அவரை ஆன்ட்டி என அழைத்துள்ளார். பணியிடத்தில் இப்படி அழைப்பது வயது, பாலின பாகுபாட்டிற்கு ஒப்பானது & தன்னை அவமதிப்பதாகும் என கூறி அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் மனதை புண்படுத்தியதற்காக ₹1.8 லட்சம் இழப்பீடு வழங்குபடி ஹாஸ்பிடலுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News April 9, 2026

BREAKING: செல்போன் ரீசார்ஜ் விலை குறைகிறது

image

டேட்டா பயன்பாடு இல்லாத, அழைப்புகள் மற்றும் SMS-க்கு மட்டும் குறைந்த விலையில் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை (STV) அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு TRAI பரிந்துரைத்துள்ளது. ஜியோ, ஏர்டெல், Vi போன்ற நிறுவனங்கள், மொபைல் டேட்டா இல்லாத சலுகைகளை அறிமுகப்படுத்தினால், தற்போதைய ரீசார்ஜ் விலையை விட(₹40 – ₹60) கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், பட்டன் செல்போன் பயன்படுத்தும் பலர் பயனடைவார்கள்.

error: Content is protected !!