News March 27, 2024
வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடி பறிமுதல்

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேப்ரிகார்னியன் ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வளாகம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் E.D. சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வாஷிங் மெஷினுக்குள் இருந்த கணக்கில் வராத ரூ.2.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 47 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
Similar News
News November 17, 2025
பாகிஸ்தானில் நொடியில் தப்பிய பயணிகள் ரயில்

பாக்.,கில் தனி நாடு கோரி பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்காக நசீராபாத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், அது ரயில் சென்ற பிறகே வெடித்தது. இதனால் பயணிகள் உயிர்தப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருள்களை கைப்பற்றி, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
ரயில்வேயில் 5,810 Vacancies: சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <
News November 17, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.


