News March 26, 2024
முருகன், ஜெயக்குமார் இலங்கை செல்ல பாஸ்போர்ட்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து, முருகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News August 18, 2025
அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட OPS, பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். திடீர் திருப்பமாக, NDA-வில் இருந்து விலகிய அவரை மீண்டும் இணைக்க மாட்டோம் என்று EPS திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில், அமமுகவுடன் இணைந்து 2026-ல் அவர் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். இதை <<17438443>>டிடிவியும் <<>> மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.
News August 18, 2025
அன்பும், காதலும் பேசும் தம்பதியர் தினம் இன்று!

கைப்பிடித்த நாள் முதல் இறுதி வரை கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி தேசிய தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, புன்சிரிப்புடன் விட்டுக் கொடுத்து ரசித்துக் கொண்டே வாழ்வது தான் வாழ்க்கை. இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோள் கொடுத்து, கடமையில் கண்ணாக வாழ்ந்து பாருங்கள், வாழ்க்கை வசந்தமாகும்.
News August 18, 2025
இந்திய அணிக்கு கோச்சாகும் எம்.எஸ்.தோனி?

இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்திய Ex வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த ஆர்வம் தோனிக்கு இருப்பதாக தெரியவில்லை என்றும், விளையாடுவதை விட சில சமயங்களில் பயிற்சியாளராக இருப்பது கடினம் எனவும் தெரிவித்தார். தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராகணும் என நினைக்கிறீங்களா?