News March 26, 2024
விராட் கோலிக்கு ஆரஞ்சு கேப்

அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை, பெங்களூரு வீரர் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார். பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 77 ரன்கள் குவித்தார். அணியின் வெற்றிக்கு காரணமான அவருக்கு, ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் மொத்தமாக 98 ரன்கள் எடுத்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Similar News
News August 14, 2025
தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும்.
✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள்
➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள்.
➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.
News August 14, 2025
நான் உறங்க போவதில்லை: CM ஸ்டாலின்

திமுக மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால், தானும் உறங்கப் போவதில்லை, உங்களையும் உறங்கவிட போவதில்லை என ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், வரும் நாள்களில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், தமிழகத்தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்றும் கூறினார்.
News August 14, 2025
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை மீது வழக்கு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய தமிழிசை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் தடையை மீறி போராட்டக்களத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். போலீசார் தனது வீட்டை சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும் என பேட்டியில் கேட்டிருந்தார். இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக கூறி தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.