News January 12, 2025
மக்கள் தொகையில் 7%.. அமித்ஷா அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்திய மக்கள் தொகையில் 7% பேர் சட்டவிரோதமாக போதைப் பொருளை பயன்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இது ஒரு கேன்சர் போன்று நாட்டின் தலைமுறைகளை அழித்து வருவதாகவும், இதை உடனே தடுத்தாக வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் அதிகபட்சமாக, கடந்த 2024ல் ₹16,914 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
தேசத்தை ஆராதிக்கும் சர்வதேச அழகி!

2023-ல் Miss International India Crown வென்ற புனேவை சேர்ந்த காஷிஷ் மெத்வானிக்கு சினிமாவிலும், மாடலிங் துறையில் எக்கச்சக்க ஆஃபர்கள். ஆனால், எந்த Offer-க்கும் அசராத அவர், தன்னை தேச சேவைக்கு அர்ப்பணித்துள்ளார். தான் அழகு மட்டுமில்லை, வீரமகள் என்பதையும் உணர்த்தியுள்ளார் காஷிஷ். 2024-ல் ராணுவ அதிகாரிகளுக்கான CDS தேர்வில் 2-ம் இடம் பிடித்து, தற்போது விமானப்படையில் பணிபுரிகிறார். சல்யூட் மேடம்!
News September 15, 2025
சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சிராஜ்

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் முகமது சிராஜ் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், முகமது சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் இந்தியா தொடரை டிரா செய்ய முடிந்தது. சிறந்த வீரராக அவர் தேர்வாக இதுவே முக்கிய காரணம். அதேபோல் மகளிரில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் விருதை பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக ஓர்லா அசத்தியிருந்தார்.
News September 15, 2025
இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது: ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தங்களை நீக்கும் ஒரு முக்கிய நகர்வாக <<17714489>>உச்சநீதிமன்ற உத்தரவு <<>>அமைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, திமுக இதனை எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளை SC பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக CM கூறினார்.