News January 8, 2025

மறியலில் ஈடுபட்ட 75 பேர் காலையில் கைது; மாலையில் விடுவிப்பு

image

விழுப்புரம் நகராட்சி திடல் பகுதியில் நேற்று (ஜன.7) காலை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

Similar News

News February 10, 2026

கோணங்கிபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கோணங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிருபாலையா பெண் குழந்தைகள் இல்லத்தின் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் புதுப்பித்தலுக்காக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆய்வு மேற்கொண்டு, இல்ல பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை இன்று (பிப்.10) பார்வையிட்டார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் உள்ளனர்.

News February 10, 2026

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய ஆட்சியர்

image

இன்று (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி கீழ் பெரும்பாக்கம் திரௌபதியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

News February 10, 2026

விழுப்புரம் இரயில்வே வடக்கு குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட இரயில்வே வடக்கு குடியிருப்பு பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து இன்று (பிப்.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வாக்காளர் பதிவு அலுவலர் முருகேசன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி உட்பட பலர் உள்ளனர்

error: Content is protected !!