News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
பரிசாக வந்த வேல்.. ரிட்டன் கொடுத்த உதயநிதி

ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் பலர் உதயநிதிக்கு பரிசுப்பொருள்களை வழங்கினர். அதில் ஒருவர் உதயநிதிக்கு வேல் வழங்கியபோது, அதை வாங்கிய சில நொடிகளில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும், அதனை வாங்கி வைத்துக்கொண்டார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
காமராஜரை கொலை செய்ய முயன்றனர்: ஸ்டாலின் பரபரப்பு

காமராஜரை டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சங்கிக் கூட்டம் கொலை செய்ய முயன்றதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விருதுநகர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், காமராஜர் மறைவின் போது அவரது மகன் போல் நின்று இறுதி மரியாதை செலுத்தியவர் கருணாநிதி எனவும் கூறியுள்ளார். முன்னதாக, காமராஜர் மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டதாக EPS கூறியிருந்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
தேர்தலில் இருந்து பின் வாங்க இதுதான் காரணம்: திருமா

தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து திருமா மீண்டும் விளக்கமளித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்வது, என்னுடைய நோக்கத்திற்கு பயன் தரும்; விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னையை பேச முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் நான் போட்டியிட முடிவு எடுத்தேன். ஆனால், எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.


