News March 24, 2024
ரயில் நிலையங்களில் பாரத் அரிசி விற்க அனுமதி

மத்திய அரசின் பாரத் அரிசி & கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3 மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய அனுமதி ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். கிலோ அரிசி ₹29-க்கும், கிலோ கோதுமை ₹27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News October 25, 2025
கூட்டணிக்கு வர விஜய்க்கு நேரடியாக அழைப்பு விடுத்தார்

NDA கூட்டணியில் தவெகவை சேர்க்க அடுத்தடுத்து பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்மையில், அதிமுக EX அமைச்சர் RB உதயகுமார் மறைமுகமாக விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் AC சண்முகம், வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், ஆட்சி மாற்றம் உறுதி என்றும் கூறியுள்ளார்.
News October 25, 2025
கால்கள் அடிக்கடி மரத்துப்போகுதா? ஜாக்கிரதை!

கால்கள் மரத்துப்போவது சாதாரண விஷயம் என்றாலும், அடிக்கடி கால்கள் மரத்துப்போவது சில உடல்நல பிரச்னைகளை குறிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சுகர், வைட்டமின் குறைபாடு, நரம்பியல் பிரச்னைகள், வெரிகோஸ் வெயின், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் டாக்டரை பாருங்கள். SHARE.
News October 25, 2025
சிட்னி கிரவுண்டும்.. Hitman ரெக்கார்டும்!

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?


