News March 24, 2024
ரயில் நிலையங்களில் பாரத் அரிசி விற்க அனுமதி

மத்திய அரசின் பாரத் அரிசி & கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3 மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய அனுமதி ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். கிலோ அரிசி ₹29-க்கும், கிலோ கோதுமை ₹27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 12, 2025
பென்குயின் காஜல் அகர்வால் PHOTOS

தமிழ்-தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவரது கொய்யும் கண்கள் மற்றும் கலக்கலான ஸ்கிரீன்‑பிரெசென்ஸுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர், இன்ஸ்டாவில் ஆனந்தமாய் ஆடும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மனதில் மெல்லிய பூகம்பத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களாக உள்ளன. உங்களுக்கும், போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 12, 2025
டெல்லி சம்பவம்: 18 நாள்கள்.. இது மகாபாரத போர்!

டெல்லி சம்பவத்திற்கு இந்தியா பழிதீர்க்குமா என விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நெட்டிசன் ஒருவரின் பதிவு வைரலாகி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு 12 நாள்களிலும், பஹல்காம் தாக்குதலுக்கு 15 நாள்களிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அப்படியானால் டெல்லி சம்பவத்திற்கு எத்தனை நாள் எடுத்து கொள்ளப்படும் என அவர் கேட்க, மகாபாரத போர் போன்று 18 நாள்கள் ஆகும் என மற்றொரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.
News November 12, 2025
விஜய் கட்சியில் சண்டை வெடித்தது

விஜய் – ஆதவ் அர்ஜுனா இடையில் மிக கடுமையான சண்டை நடந்து வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களுக்கு, சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்ட மேடையில் விஜய் அஞ்சலி செலுத்த, ஆதவ் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதேபோல், மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் கட்சியின் நிலைப்பாட்டை மதிக்காமல் செயல்படுவது, திமுக மீது தனிமனித வெறுப்பு கொண்டு பேசுவது விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.


