News March 23, 2024
சேலையூர் SSI-ஐ கைது செய்த வங்கதேச ராணுவம்

வங்கதேச எல்லையைக் கடக்க முயன்ற தாம்பரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (SSI) செல்வராஜை, அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. மடிப்பாக்கத்தில் தங்கி பணியாற்றி வந்த இவர், விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜானியாபாத் என்ற இடத்தில் சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
Similar News
News April 30, 2025
சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
News April 30, 2025
ராசி பலன்கள் (30.04.2025)

➤மேஷம் – பயம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – எதிர்ப்பு ➤துலாம் – ஆக்கம் ➤விருச்சிகம் – பொறுமை ➤தனுசு – பேராசை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நட்பு ➤மீனம் – புகழ்.
News April 30, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு?

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்.14-ல் நடைபெற்று, டிசம்பரில் முடிவுகள் வெளியாகின. மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ல் வெளியாகி, செப்டம்பரில் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <