News March 23, 2024
சேலையூர் SSI-ஐ கைது செய்த வங்கதேச ராணுவம்

வங்கதேச எல்லையைக் கடக்க முயன்ற தாம்பரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (SSI) செல்வராஜை, அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. மடிப்பாக்கத்தில் தங்கி பணியாற்றி வந்த இவர், விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜானியாபாத் என்ற இடத்தில் சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
Similar News
News November 10, 2025
வடசென்னை பார்த்து வருந்தினேன்: நடிகர் கிஷோர்

நடிக்கும்போது தான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறாததால் வருத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘அரசன்’ படத்தில் வடசென்னையின் செந்திலாக இடம்பெற விரும்புவதாகவும், வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை 1-ல் சேர்க்கப்படாத Footage-களை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
News November 10, 2025
விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கணுமா? இதோ வழி!

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.
News November 10, 2025
SIR மூலம் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

SIR மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள்; அந்த முயற்சி ஒருபோது எடுபடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என சாடிய அவர், DMK தொடர்ந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி ADMK மனு தாக்கல் செய்தது கபட நாடகம் என விமர்சித்தார். மேலும், உண்மையிலேயே அக்கரை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.


