News March 22, 2024
எச்.ஐ.வி.யை அழிக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்?

எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி கிருமியை மனித உடல்களில் இருக்கும் செல்களில் இருந்து நீக்கும் வழியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு திருத்த தொழில் நுட்பத்திற்கு 2020ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே முறையை கடைபிடித்து, நமது செல்களில் இருந்து எச்.ஐ.வி பாதிப்பை நீக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News April 29, 2025
மேலே பாம்பு.. கீழே நரி.. மத்திய அரசை தாக்கிய CM ஸ்டாலின்!

மேலே பாம்பு.. கீழே நரி.. விழுந்தால் அகழி, இதற்கு இடையில் மாட்டியவர் போல மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடிக்கு இடையே சாதனை செய்கிறோம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக, அமைதியாக இருப்பதால் இங்கு சாதி, மத வன்முறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலவரத்தை தூண்ட சிலர் நினைத்தாலும் மக்கள் அதனை முறியடித்து விடுகிறார்கள் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.