News March 22, 2024
எச்.ஐ.வி.யை அழிக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்?

எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி கிருமியை மனித உடல்களில் இருக்கும் செல்களில் இருந்து நீக்கும் வழியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு திருத்த தொழில் நுட்பத்திற்கு 2020ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே முறையை கடைபிடித்து, நமது செல்களில் இருந்து எச்.ஐ.வி பாதிப்பை நீக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு GOOD NEWS!

USA-வில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்னையாக மாறிய நிலையில், அதிபர் டிரம்ப், பழங்கள், தேயிலை, உள்ளிட்ட பல உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரிகளை குறைத்துள்ளார். இது, இந்திய மாம்பழங்கள், மாதுளைகள், தேயிலை, மசாலா பொருள்களின் ஏற்றுமதிக்கு உதவும். இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வரி குறைப்பால் இந்திய உணவு பொருள்களின் விலைகள் USA-வில் குறைய வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பிஹார் தோல்வி ஏன்? ஜன் சுராஜ் விளக்கம்

CM நிதிஷ்குமார் அரசு உலக வங்கியிலிருந்து கிடைத்த ₹14,000 கோடி நிதியை தேர்தலில் வெற்றி பெற பயன்படுத்திவிட்டதாக ஜன் சுராஜ் தேசிய தலைவர் உதய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வைத்தே இலவசங்களை அறிவித்ததாகவும், இப்பணம் இல்லை என்றால் NDA தோற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜன் சுராஜ் வாக்காளர்களில் சிலர் RJD ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென பயந்து NDA-க்கு வாக்களித்ததாகவும் பேசியுள்ளார்.
News November 16, 2025
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கும் பணிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள், நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தன. இந்நிலையில், விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிச.15 முதல் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


