News December 3, 2024

Phone வாங்க காசு இல்லை.. தாயை மிரட்டிய மகன்

image

ஆறாவது விரலான போன் படுத்தும் பாடு சொல்லி மாளாது. மஹாராஷ்டிரா, நாக்பூரில் தாய் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது 18 வயது மகன் போன் வாங்க ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளான். அதற்கு பணம் இல்லையென தாய் பதிலளிக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றவன், வாள் எடுத்துக் காட்டி தாயையும் சகோதரியையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளான். போன் நம்மை ஆட்டி வைக்கிறது பார்த்தீர்களா?

Similar News

News November 1, 2025

BREAKING: லெஜெண்ட் விடை பெற்றார்

image

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2024-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.

News November 1, 2025

புதுவை இந்தியாவுடன் இணைந்தது எப்படி தெரியுமா?

image

சுதந்திரத்துக்கு பிறகும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மன்னர்களாலும், பிரெஞ்சு, டச்சு நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன. 1954-ம் ஆண்டு வரை பிரான்ஸால் நேரடியாக ஆளப்பட்டு வந்த நிலையில், இந்தியாவுடன் இணைய விரும்பி புதுவை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு 1962, நவ 1-ம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதால், புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது.

News November 1, 2025

திங்கள்கிழமை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!