News November 29, 2024
2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
Parenting: பிள்ளைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போதா?

உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுதா? அப்போது, இந்த 6 பொருள்களை அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள், சக்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, ப்ரோக்கோலி, காளான், கீரை வகைகளை குழந்தையின் Diet-ல் சேர்த்தால் கட்டாயம் 1 மாதத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.
News August 23, 2025
நகை கடன்.. மக்களுக்கு முக்கிய தகவல்

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
News August 23, 2025
அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.