News November 29, 2024

OPS மீது விசாரணை நடத்த தடை

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீது மறுவிசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் OPS அதிக சொத்து சேர்த்ததாக நடைபெற்ற வழக்கை திரும்பப்பெற சிவகங்கை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு OPSக்கு சற்று ஆறுதலளித்துள்ளது.

Similar News

News April 29, 2025

உற்பத்தி பாதிப்பு.. முட்டை விலை அதிகரிக்குமா?

image

நாமக்கல் மண்டலத்தில் வெயில் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோழிகள் உணவு உண்ணும் அளவும் குறைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால், முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ளது.

News April 29, 2025

மத்தியஸ்தத்திற்கு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள்

image

இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என இந்தியா உக்கிரமாக உள்ளது. இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல், இந்தியா-பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க தயார் என ஈரானும் முன்வந்துள்ளது.

News April 29, 2025

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!