News November 29, 2024

OPS மீது விசாரணை நடத்த தடை

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீது மறுவிசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் OPS அதிக சொத்து சேர்த்ததாக நடைபெற்ற வழக்கை திரும்பப்பெற சிவகங்கை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு OPSக்கு சற்று ஆறுதலளித்துள்ளது.

Similar News

News November 15, 2025

35 ஆண்டுகளாக MLA-கள்.. மீண்டும் வெற்றி

image

பிஹார் NDA கூட்டணி மூத்த வேட்பாளர்களான பிரேம் குமார் (BJP), பிஜேந்திர பிரசாத் யாதவ் (JDU) ஆகியோர், 9-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1990 முதல் MLA-க்களாக உள்ளனர். கயா தொகுதியில் பிரேம் குமார் 26,423 வாக்குகள் வித்தியாசத்திலும், பிஜேந்திர சிங் 30,803 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இருவரும் இதே தொகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளாக MLA-க்களாக உள்ளனர்.

News November 15, 2025

வி.சேகர் மறைவு வேதனை அளிக்கிறது: அன்புமணி

image

திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைவு வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர் வி.சேகர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

News November 15, 2025

டெல்லி சம்பவம்: டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 டாக்டர்களின் அங்கீகாரத்தையும் தேசிய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு வழக்கில் முசாஃபர் அகமது, அதில் அகமது ராதெர், முஷாமில் ஷகீல், ஷாகீன் சயீத் உள்ளிட்ட 4 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!