News November 29, 2024

பருப்பு விலை உயராதது இதனால்தான்!

image

மத்திய அரசின் நடவடிக்கையால் பருப்பு ரகங்களின் விலை உயரவில்லை என மினிஸ்டர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் இருக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்துவதாகக் கூறினார். இதனால்தான் துவரம், உளுந்து, மைசூர் பருப்புகளின் விலை 3 மாதங்களாக உயரவில்லை என்றார்.

Similar News

News April 29, 2025

UPI சரியா வேலை செய்யணும்.. அமைச்சர் கண்டிப்பு

image

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.

News April 29, 2025

மே தின விடுமுறை: சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

மே தினம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 565 பஸ்களும், வெள்ளி, சனிக்கிழமை 375 பஸ்களும் இயக்கப்படவுள்ளது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 100 பஸ்களும், கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு 250 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.

News April 29, 2025

வெளி மாநிலத்தவர்களுக்கு தனி ID கார்டு: அமைச்சர்

image

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.

error: Content is protected !!