News November 28, 2024
கசவு புடவையில் பாட்டியை நினைவுபடுத்திய பிரியங்கா!

கேரள கசவு புடவையில் நாடாளுமன்றத்திற்கு வந்த மக்களவை எம்பி பிரியங்கா காந்தி, அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுபடுத்துவதாக பலரும் பேசிவருகின்றனர். அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் இந்திராவை ஒத்திருந்தது. மக்களுடன் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக இந்திரா காந்தி இது போன்ற புடவைகளை விரும்பியதாகவும், தற்போது பிரியங்கா அதை நினைவு பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 23, 2025
TN அரசியல் தெரிந்தபின் விஜய் அரசியலுக்கு வரட்டும்: எச்.ராஜா

தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர விஜய் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். பாஜக கொள்கை ரீதியான எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? என கேட்டார். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன் என்றார். மேலும், வாக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.
News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.
News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.