News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

தமிழகத்தை கடனாளி ஆக்கிய திமுக: EPS

image

கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என EPS கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அதிமுக ஆட்சியில் அரசுக்கு வருமானம் இல்லாத போதிலும் விலைவாசி உயரவில்லை. தற்போது GST, பத்திரப்பதிவு, கலால் வரி உயர்ந்து வருமானம் அதிகரித்தும் திமுக அரசு கடன் வாங்குவதாக EPS சாடியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழக மக்களை கடனாளி ஆக்கியது தான் CM ஸ்டாலினின் சாதனை என அவர் விமர்சித்துள்ளார்.

News December 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 564
▶குறள்:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
▶பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

News December 29, 2025

விஜய்யின் புதிய குட்டி ஸ்டோரி

image

‘ஜனநாயகன்’ விழாவில் ரசிகர்களிடம் குட்டி ஸ்டோரி ஒன்றை விஜய் பகிர்ந்தார். தன் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணி, மழையில் நனையக்கூடாது என ஆட்டோகாரர் குடையை தருகிறார். எப்படி திருப்பி தருவது என கேட்டதற்கு, குடை தேவைப்படும் ஒருவரிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். பல கைகள் மாறிய அக்குடை இறுதியாக ஆட்டோகாரர் மகளிடம் வந்தது. எனவே, சின்ன சின்ன நல்லது செய்தால் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.

error: Content is protected !!