News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
காங்., திமுக கூட்டணியில் மீண்டும் பிரச்னை வெடித்தது

காங்கிரஸில் பலர் அதிகாரப் பகிர்வு முழக்கத்தை முன்வைக்கின்றனர். இந்நிலையில் <<18750548>>லயோலா கருத்துக்கணிப்பை<<>> சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி இல்லாமல் TN-ல் வெல்ல முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், TN-ல் அதிகாரப் பகிர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் திமுக – காங்., கூட்டணியில் பிரச்னை வெடித்துள்ளதாக பேசப்படுகிறது.
News January 5, 2026
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரும் தெரியாதா?

ஆதார் கார்டு இல்லாமல் எந்த அரசு சேவையையும் பெற முடியாது. இந்நிலையில், ஆதார் கார்டும் தொலைந்துவிட்டது, 12 இலக்க நம்பரும் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அதற்கு, UIDAI இணையதளம் சென்று, Aadhaar Service-ஐ தேர்வு செய்யவும். அதில் Retrieve Aadhar ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கு உங்களின் பெயர், மொபைல் நம்பர், முகவரி விவரங்களை உள்ளிட்டால், உங்களின் ஆதார் கார்டு எண் கிடைக்கும். SHARE IT!
News January 5, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹8,640 உயர்ந்தது

ஆபரணத் <<18766340>>தங்கம் <<>>சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலை எதிரொலியால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை தாறுமாறாக உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


