News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

News November 7, 2025

ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி: கிருஷ்ணசாமி

image

ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜன.7-ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும், அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

News November 7, 2025

பிரபல பாடகி சுலக்‌ஷனா மாரடைப்பால் உயிரிழப்பு

image

பழம்பெரும் பாடகி சுலக்‌ஷனா பண்டிட் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரில் 1954-ல் பிறந்த இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடியது மட்டுமில்லாமல், 25-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1967-ல் தக்தீர் படத்திற்காக லதா மங்கேஷ்கருடன் இணைந்து சுலக்‌ஷனா பாடிய பாடல் மிகப்பிரபலம். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகம், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP..

error: Content is protected !!