News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் அன்புமணி

image

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என அன்புமணி ஊர்ஜிதமாக கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் தேர்தலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசு செய்யும் தவறுகளையும் பாமக சுட்டிக்காட்டுவதாக அவர் பேசியுள்ளார்.

News November 28, 2025

GK TODAY: 3-ம் உலக நாடுகள் தெரியுமா?

image

1950 முதல் 1990கள் வரை அமெரிக்கா – ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) பனிப்போர் காலத்தில், அமெரிக்க ஆதரவு நாடுகள் முதலாம் உலக நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவானவை 2-ம் உலக நாடுகள் என்றும், 2-லும் சேராத ‘அணிசேரா’ நாடுகள் 3-ம் உலக நாடுகள் எனவும் அழைக்கப்பட்டன. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசியல் நிலையற்ற ஏழை நாடுகளை குறிப்பதாக ‘3-ம் உலக நாடுகள்’ என்பது மாறிவிட்டது.

News November 28, 2025

RCB-யை தொடர்ந்து ஏலத்திற்கு வரும் RR?

image

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

error: Content is protected !!