News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

மங்கும் WTC பைனல் கனவு!

image

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், 2027 WTC பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது. பைனலுக்கு முன்னேற 60% புள்ளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 48.15% புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 டெஸ்டில் 6 வெற்றி, 2 டிரா அல்லது 7 வெற்றிகளை அடைய வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. இந்தியா அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸி. அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

News November 27, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

image

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

News November 27, 2025

டி.கே.சிவக்குமாரை CM ஆக்க காங்., சத்தியம் செய்ததா?

image

யாராக இருந்தாலும் சரி கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என டி.கே.சிவக்குமார் பதிவிட்டுள்ளார். 2023-ல் கர்நாடக பவர் ஷேரிங் குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த 2.5 ஆண்டுகள் DKS-ம் CM-ஆக செயல்படுவர் என காங்., மேலிடம் வாக்குகொடுத்ததாம். இந்நிலையில், இந்த சத்தியத்தை நினைவுப்படுத்தவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

error: Content is protected !!