News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

தருமபுரி: பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை!

image

தருமபுரி: திம்மம்பட்டியைச் சேர்ந்த முரளி (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

News December 17, 2025

ஆஸ்கரில் இந்திய திரைப்படம்!

image

ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படமான ‘ஹோம் பவுண்ட்’, சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் (15 படங்கள்) இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில், நீரஜ் கய்வான் இயக்கிய இந்த படத்தில், இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த பட்டியலில் இருந்து, இறுதி நாமினேஷன் பட்டியல் ஜன.22-ல் அறிவிக்கப்படவுள்ளது.

News December 17, 2025

BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறாரா செந்தில் பாலாஜி?

image

2021 தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் கரங்களை வலுப்படுத்த கோவை தெற்கில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியதால், அதை முறியடிப்பதற்காக திமுக இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!