News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம்: CPM

கூட்டணி ஆட்சியா? தனித்த ஆட்சியா? என்ற பிரச்னைக்கு, அதிமுகவும், பாஜகவும் முதலில் முடிவு காணவேண்டும் என CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என பேசும் அதேசமயம், EPS தனித்த ஆட்சி என பேசி வருவதாக விமர்சித்துள்ளார். அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றும் பாஜக, தைரியமாக கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 6, மார்கழி 22 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News January 6, 2026
அதிமுக, பாஜகவுக்கு 3-வது இடம்: ஐ.பெரியசாமி

தமிழக அரசியல் பற்றிய கணிப்பு அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். பிஹார், மகாராஷ்டிரா போல் தமிழ்நாடு இல்லை என தெரிவித்த அவர், பாஜக, அதிமுக இடையே கூட்டணி இருக்கிறதா எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் அந்த கூட்டணிக்கு 2026 தேர்தலில் 3-வது இடம்தான் கிடைக்கும் எனவும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


