News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

செல்போன் ரீசார்ஜ் குறைந்தது.. அதிரடி ஆஃபர்!

image

மிக மலிவான வருடாந்தர பிளானை BSNL அறிவித்துள்ளது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ₹3,500-க்கும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், BSNL ₹2,399 ரீசார்ஜ் செய்தால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 365 நாள்கள் அன்லிமிடெட் அழைப்புகள், நாள்தோறும் 100 SMS மற்றும் 2 GB டேட்டா கிடைக்கும். ஆனால், நெட்வொர்க் பிரச்னைகளை தீர்க்காதவரை, இது போன்ற திட்டங்களால் பயனில்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

News November 20, 2025

டெல்லி குண்டு வெடிப்பில் பாக். சதி: ஒப்புக்கொண்ட PoK PM

image

டெல்லி கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக PoK PM சௌத்ரி அன்வாருல் ஹக் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனிநாடு கேட்கும் பலுசிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவது தொடர்ந்தால், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம் என முன்பு சொன்னோம். இப்போது, அல்லாவின் அருளால், எங்களுடைய தீரமிக்க வீரர்கள் அதை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: CM ஸ்டாலின்

image

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!