News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்: ராகுல்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
News January 1, 2026
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை யார் பார்த்தீங்க?

புது வருஷம் தொடங்கியாச்சு. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பல இடங்களிலும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்துள்ள முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே!
News January 1, 2026
விசிகவில் 48 மா.செ.,க்களை நீக்கிய திருமாவளவன்!

விசிகவில் 48 மா.செ.,க்கள் நீக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 144 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் மண்டல பொறுப்பாளர்களாகவும், 48 பேர் நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையுடன் 96 மா.செ.,க்களின் பதவிக்காலம் நிறைவடைவதால், அதன் பின் நியமன முறையில் இல்லாமல் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


