News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
மூலிகை: வெற்றிலையின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வெற்றிலையை மெல்லுவதால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவை நீங்கும் *படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தி அதிகரிக்கும் *அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும் *கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். SHARE IT.
News October 14, 2025
சினிமாவில் நன்றி இல்லாமல் போய்விட்டது: பேரரசு

படம் முடிந்தால் போதும் சில நடிகைகள் யாரையும் மதிப்பது கிடையாது என இயக்குநர் பேரரசு வேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய அவர், சினிமாவில் நன்றி என்பதே இல்லாமல் போய்விட்டது என்றார். படம் முடிந்த பிறகு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் முக்கிய நடிகர்கள் வருவதில்லை என்ற பேச்சு எழுந்தது. குறிப்பாக அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் மீது பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
News October 14, 2025
Windows 10-க்கான காலக்கெடு நீட்டிப்பு

<<17898791>>Windows 10<<>> OS-ஐ முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் சில மாதங்களுக்கு தள்ளிப்போட்டுள்ளது. இன்றுடன் செக்யூரிட்டி அப்டேட் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று, 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலவரையறைக்குள் பயனர்கள் Windows 11-க்கு அப்டேட் செய்ய வேண்டும் அல்லது சைபர் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாகும் வாய்ப்பு ஏற்படும்.