News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
டிசம்பர் 31: வரலாற்றில் இன்று

*1600 – கிழக்கு இந்திய கம்பெனி தொடக்கம்
*1910 – நாடக கலைஞர் டி.எஸ்.துரைராஜ் பிறந்தநாள்
*1984 – ராஜீவ் காந்தி இந்திய பிரதமரானார்
*1989 – நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்
*1999 – 3 தீவிரவாதிகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ல் இருந்த 190 பணயக்கைதிகள் மீட்பு
News December 31, 2025
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: EPS

அதிமுகவில் கடுமையாக உழைப்பவர்களுக்கு வீடு தேடி வந்து பதவி தரப்படும் என EPS தெரிவித்துள்ளார். திமுகவை ஒரு கார்ப்பரேட் கம்பெனி என சாடிய அவர், அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என கூறியுள்ளார். கருணாநிதியின் குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி வாழ்வதாகவும், அவர்களது குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பேசியுள்ளார்.
News December 31, 2025
ஷமி விஷயத்தில் பிசிசிஐ U-Turn?

நல்ல ஃபார்மில் இருந்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஷமி இடம்பிடிக்காதது பேசுபொருளானது. இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் ஷமியின் செயல்பாட்டை பிசிசிஐ கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஷமி உடற்தகுதியுடன் இருந்தால் நியூசிலாந்து ODI தொடருக்கு அவரை தேர்வு செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். ஷமி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 2027 WC வரை இந்திய அணியில் நீடிப்பார்.


