News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
முகத்தில் உள்ள தேமல் மறைய சூப்பர் TIPS!

முகத்தில் ஆங்காங்கே தேமல் இருப்பதால் வெளியில் முகத்தை காட்டவே தயங்குறீங்களா? இதற்கு டாக்டரை அணுகுவது முக்கியம் என்றாலும், வீட்டு வைத்தியமும் செய்து பார்க்கலாம். ➤துளசி இலையுடன் சுக்கை வைத்து நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤இரவில் படுக்கும் முன் தேமல் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤1 மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் தேமல் விரைவில் மறையும். SHARE IT.
News December 29, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அரசு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

பள்ளிகள் தொடர் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளையும்(டிச.30), நாளை மறுநாளும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதலாக சுமார் 1,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். SHARE IT.
News December 29, 2025
ரஜினி, அஜித்தை முந்திய PR

2025-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஏஜிஎஸ், வெற்றி உள்ளிட்ட பல தியேட்டர்களில் பிரதீப் ரங்கநாதனின் ’டிராகன்’ முதலிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ரஜினியின் கூலி, அஜித்தின் விடாமுயற்சி, GBU, சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் குபேரா, இட்லிகடை, SK-ன் மதராஸி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியாகின. ஆனால் அதையும் தாண்டி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் PR நடித்த டிராகன் அதிகம் வசூல் செய்துள்ளது.


