News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

மதிமுக கூட்டணி மாற வாய்ப்பு: மல்லை சத்யா

image

திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனையாகத்தான் எப்போதும் இருப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுகவுடன் பேச்சுவார்தை நடத்தியதை எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், துரைவைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.

News December 1, 2025

ஆட்டநாயகன் விருதுகள்… உச்சத்தை எட்டும் கோலி!

image

SA-வுக்கு எதிரான முதல் ODI-யில் சதம் அடித்த கோலி ஆட்டநாயகனாக தேர்வானார். இதன் மூலம், சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 70 முறை ஆட்டநாயகன் விருதை அவர் வென்றுள்ளார். ODI-யில் 44 முறை, T20-யில் 16 முறை, டெஸ்டில் 10 முறை ஆட்டநாயகனாக கோலி தேர்வாகியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 76 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கடவுளின் ரெக்கார்டை கிங் முந்துவாரா?

News December 1, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிச.1-ம் தேதி (இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச.13-ம் தேதி பணி நாளாக இருக்கும். மேலும், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!