News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

image

தவெகவில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான அவர், நம்மோடு பயணிக்க இருப்பது பெருமகிழ்ச்சி என விஜய் தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 6, 2025

காலத்தினாற் செய்த உதவி.. தமிழகத்துக்கு இலங்கை நன்றி

image

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, தமிழக அரசு தரப்பில், ₹1.19 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டின் ஊவா மாகாண Ex CM செந்தில் தொண்டமான், இந்த மனிதாபிமான உதவிக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில், தமிழகம் செய்த பேருதவி தமது மக்களின் மீட்சிக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 6, 2025

Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15K-₹40K சம்பாதியுங்கள்

image

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோக்கள் ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்புங்கள். கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

error: Content is protected !!