News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

PM மோடி அவர்களே! டாட்டா பை பை!! ஜோதிமணி

image

NDA பொதுக்கூட்டத்தில் காங்., மற்றும் திமுகவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்ததற்கு ஜோதிமணி MP பதிலடி கொடுத்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜகவும், மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை.. டாட்டா பை பை! என்று விமர்சித்துள்ளார்.

News January 23, 2026

வருமான வரி வழக்கு.. விஜய்க்கு அடுத்த சிக்கல்

image

ஜனநாயகன் பட ரிலீஸ், சிபிஐ விசாரணை என அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் விஜய்க்கு வருமான வரித்துறை வழக்கு மேலும் ஒரு சோதனையாய் அமைந்துள்ளது. புலி பட வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை அவருக்கு ₹1.5 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்த விஜய்யின் வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அபராதம் விதித்தது சரியே என வருமான வரித்துறை வாதிட்ட நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி: EPS பதிலடி

image

‘ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சியை நடத்திவிட்டு, TN-ன் வளர்ச்சியை முன்னிறுத்தும் NDA கூட்டணியை பற்றி பேசலாமா என <<18937104>>ஸ்டாலினுக்கு <<>>EPS பதிலடி கொடுத்துள்ளார். அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும் என்பார்கள்; ஆனால், நான்கரை ஆண்டாக ஒரு அடி கூட நகராத ஆட்சி DMK ஆட்சி என விமர்சித்த அவர், NDA கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை கண்டு இப்படி பயந்துவீட்டீர்களே முதல்வரே!, இது தொடக்கம் தான் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!