News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
வெள்ளிக்கிழமையில் அருள் தரும் அம்பாள் மந்திரம்..!

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினம், குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க இந்த அம்பாள் மந்திரத்தை சொல்லுங்க.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!
News April 18, 2025
சீனாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!

அமெரிக்கா – சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. 245% அளவுக்கு வரியை விதித்ததால், ஆவேசத்தில் உள்ள சீனா, இனி அமெரிக்காவை கண்டுகொள்ளப் போவதில்லை என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், சீன அதிகாரிகள் தன்னை சந்திக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி நாடுகளை போல சீனாவும் வரி ஒப்பந்தம் குறித்து தன்னிடம் பேச விரும்புகிறது என கூறியுள்ளார்.
News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் MLA உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.