News November 24, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2023 – 24இல் 11,096 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022 – 23இல் 10,354 கோடி யூனிட்களாக இருந்தது. ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணங்களாக அமைந்து உள்ளன. தினசரி 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்த ஆண்டு ஏப். 30இல் அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
Similar News
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
News July 9, 2025
ஆதார் கார்டு முதன்மை அடையாளம் அல்ல: UIDAI

ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News July 9, 2025
கோட்சே வழியில் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது: ஸ்டாலின்

காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.