News November 24, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2023 – 24இல் 11,096 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022 – 23இல் 10,354 கோடி யூனிட்களாக இருந்தது. ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணங்களாக அமைந்து உள்ளன. தினசரி 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்த ஆண்டு ஏப். 30இல் அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
Similar News
News November 17, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.
News November 17, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.
News November 17, 2025
அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுக அமைப்பு செயலாளர் தேவதாஸ், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கருப்பையன் ஆகியோர் மீண்டும் இணைந்தது, டெல்டாவில் அதிமுகவை வலுப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே OPS, TTV உடன் பயணித்த பலரும் திமுக, அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


