News November 24, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2023 – 24இல் 11,096 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2022 – 23இல் 10,354 கோடி யூனிட்களாக இருந்தது. ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணங்களாக அமைந்து உள்ளன. தினசரி 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்த ஆண்டு ஏப். 30இல் அதிகபட்சமாக 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
Similar News
News November 24, 2025
இலவசமாக AI பற்றி படிக்க அரசின் புதிய திட்டம்!

ஒரு பைசா செலவில்லாமல் AI பற்றி படிக்க, Yuva AI for All திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. AI பற்றிய அடிப்படை கான்செப்ட்டுகளை 4.5 மணி நேரத்தில் நீங்கள் கற்கலாம். அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. <
News November 24, 2025
தேஜஸ் போர் விமானம் விபத்து.. HAL பங்குகளின் விலை சரிந்தது

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அதில் பட்டியலிடப்பட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான HAL பங்குகளின் விலை 8.5% சரிந்து, ₹4,205-க்கு வர்த்தகமாகி வருகின்றன. துபாய் ஏர்ஷோவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதால், அதை தயாரித்த HAL நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
News November 24, 2025
நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே: ஸ்டாலின்

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என CM ஸ்டாலின் சாடியுள்ளார். சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் அரசியல் செய்தார் EPS. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்காமல், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என EPS காத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.


