News November 13, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
Similar News
News November 13, 2025
50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்பட 30 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
News November 13, 2025
திமுகவில் இணைந்தனர்

அதிமுக, OPS அணியிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக்கூடிய, துரத்தி அடிக்கப்படக்கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக உள்ளது. தனது ஆதரவாளர்கள், அதிமுக, OPS அணியில் இருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்ததாக கூறினார்.
News November 13, 2025
குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

காலையில் எழுந்து குளித்து, ஏதாவது ஒரு இனிப்பை செய்யுங்கள். அத்துடன் ₹1 நாணயமும் வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, இடது கையால், வலது கையை மூடுங்கள். நெஞ்சுக்குழி அருகே கைகளை வைத்து, ‘ஓம் கும் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்த நாள், ₹1-ஐ கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அதே போல, இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும்.


