News August 17, 2025
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல்

எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் பேசிய அவர், பாஜக உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணி ஆட்சியமைத்ததும் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்
News March 6, 2026
இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 6, 2026
USA-விடம் அணு ஆயுதத்தை விட அதிபயங்கர ஏவுகணை

உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் டூம்ஸ்டே ஏவுகணையை USA சோதித்து பார்த்துள்ளது. சில நிமிடங்களிலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையால், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை சுமந்து செல்ல முடியுமாம். இந்த சோதனை பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட சோதனை என USA கூறினாலும், ஈரான் போருக்கு இடையே இது நடந்துள்ளதால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.


