News May 7, 2025

இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

image

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News October 25, 2025

சுப்மன் கில் அவுட்

image

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் இந்திய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களுக்கு அவுட்டானார். 237 ரன்களை துரத்தும் இந்திய அணி, தற்போது 10.2 ஓவர்களில் 69/1 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

News October 25, 2025

பணம் டெபாசிட் செய்யும்போது இதை மறந்துடாதீங்க

image

*ஒரு நாளுக்கு ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு விவரம் கட்டாயம்.
*Savings Account-ல் ஆண்டுக்கு ₹10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*Current Account-ல் ஆண்டுக்கு ₹50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*இந்த டெபாசிட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News October 25, 2025

BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

image

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

error: Content is protected !!