News May 7, 2025

இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

image

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News November 21, 2025

விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

image

டிசம்பரில் சேலத்தில் இருந்து விஜய், தனது பரப்புரையை மீண்டும் தொடங்கவுள்ளார். டிச.4-ல் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் <<18340402>>அனுமதி மறுத்த நிலையில்<<>>, மாற்று தேதியை இறுதி செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, சேலம் சீலநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை பரப்புரைக்கு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

News November 21, 2025

பாலாடை தேகத்தால் உருக வைக்கும் தமன்னா

image

தமிழ், தெலுங்கு ரசிகர்களை தனது பேரழகால் மயக்கி முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இப்போதும் வெப் சீரிஸ், படங்கள் என பிஸியாகவே உள்ள அவர், தன்னை டிரெண்டிங்கில் வைத்துக்கொள்ள தவறுவதில்லை. அப்படி இன்ஸ்டாவில் வித்தியாசமான ஆடையில், அவர் பகிர்ந்து போட்டோஸ் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது என்னடா டிரஸ் என சிலர் கலாய்த்தாலும், தமன்னா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹார்டின்களை பறக்கவிடுகின்றனர்.

News November 21, 2025

விஜய் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசுகிறார்: வைகோ

image

அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என விஜய் பேசி வருவது ஒருபோதும் நடக்காது என வைகோ தெரிவித்தார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, சென்னைக்கு அழைத்து சந்தித்தது அவரின் பொறுப்பற்ற செயல் எனவும் சாடினார். அவர் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசி வருவதாகவும், CM ஸ்டாலினை Uncle என சொல்வதெல்லாம் தெனாவட்டு என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!