News May 7, 2025
இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த ராஜ் நிடிமொரு

சமந்தாவுக்கும், அவரது காதலர் ராஜ் நிடிமொருவுக்கும் கோவை ஈஷா ஆசிரமத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான முதல் நாளே, ராஜ் நிடிமொரு சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஒரு அழகான வீட்டை சமந்தாவுக்கு பரிசளித்துள்ளாராம். விரைவில் இந்த புது வீட்டில் இருவரும் குடியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 3, 2025
BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணைகிறாரா OPS?

டெல்லிக்கு OPS சென்றுள்ள நிலையில், அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக OPS டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து நட்டாவை சந்தித்து பேசவிருக்கிறாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால், EPS எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என கேள்வி எழுந்துள்ளது.
News December 3, 2025
ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.


