News May 23, 2024
5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்கு மேல் குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு இன்று மாலைக்கு பின் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
உஷாரய்யா உஷாரு..Whastapp-ல் புதுவித மோசடி..

WhastApp-ல் புதுவித மோசடி ஒன்று நடந்துவருகிறது. டிஜிட்டல் கொள்ளையர்கள் வங்கி பணியாளர்கள் போல நடித்து உங்கள் Bank Account-ல் பிரச்னை இருக்கிறது என்று கூறி SCREEN SHARE செய்ய சொல்கின்றனர். பிறகு, SCREEN SHARE சரியாக வரவில்லை எனக்கூறி WhastApp video call-ல் வர வைக்கின்றனர். பின்னர் உங்களுக்கு வரும் OTP, UPI Password ஆகியவற்றை தெரிந்துகொண்டு உங்கள் பணத்தை திருடுகின்றனர். உஷார் மக்களே..
News August 18, 2025
CPR ஜனாதிபதியாகக் கூட வரலாம்: வைகோ

அரசியலைத் தாண்டி நண்பர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வைகோ கூறியுள்ளார். கொங்கு பகுதியின் பிரதிநிதியாக அறியப்படும் அவர், ஜனாதிபதியாகக் கூட உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் INDIA கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக என்ன முடிவெடுக்கிறதோ, அதை மதிமுக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 18, 2025
துரைமுருகனிடம் நலம் விசாரித்த CM ஸ்டாலின்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் எ.வ.வேலு உடனிருந்தார். கையில் கட்டுடன் துரைமுருகன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. முழுமையான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஜூனில் காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.