News March 23, 2024

IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

image

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

நீக்கப்பட்ட 2-வது நாளே புதிய பணி

image

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இரண்டாவது நாளே KKR அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018 முதல் 2024 வரை KKR அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அபிஷேக் நாயர் துணை பயிற்சியாளரானார். ஆனால், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

News April 19, 2025

ஓய்வூதியம் பெறுவோருக்கும் மகளிர் உரிமைத் தொகை

image

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பெண்களும் சேர்ந்து ரூ.1,000 பெற முடியுமா என பலருக்கு சந்தேகம் உண்டு. அமைப்பு சாரா நல வாரியம் உள்ளிட்ட பிற துறைகளின் வழியாக முதியோர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், ரேஷன் கார்டில் பெயர் இருப்போருக்கு மாதம் ரூ.1,000 உண்டு. அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.

News April 19, 2025

எப்பவுமே லிப்ட்டில் தான் போறீங்களா.. ஒரு நிமிஷம்?

image

ஆபீஸ், மால், அபார்ட்மெண்ட் என எங்கு சென்றாலும் லிப்டில் போற பழக்கம் இருப்பவரா? எப்போதாவது என்றால் லிப்ட் ஓகேதான். ஆனால், படியில் ஏறுவதும், இறங்குவதும கால்களில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. ஒரு கார்டியோ பயிற்சி ஆகும், இது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்தும். உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்றால், படிக்கட்டில் ஏறி இறங்குங்க போதும்!

error: Content is protected !!