News March 23, 2024

IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

image

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

வங்கி கடன் அபராதம் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு

image

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், RBI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக, கடனை முன்கூட்டியே செலுத்துவோரிடம் 3- 4% வரை அபராதத் தொகையை வங்கிகள் வசூலிக்கும். 2026 ஜன.1 முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தின்படி, கடன் பெற்றவர்களுக்கே இது பொருந்தும். ஃபிக்சட் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் இதில் பயன்பெற முடியாது. SHARE IT.

News January 30, 2026

கனிமவள கொள்ளை.. சர்ச்சையில் சிக்கிய திமுக MLA

image

கரூரில் கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக MLA பழனியாண்டியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக MLA-வின் கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது, கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 30, 2026

கணவர் ‘குரங்கு’ என்றதால் மாடல் அழகி தற்கொலை

image

குரங்கு மாதிரி இருக்கும் உனக்கு நடிப்பு தேவையா என கணவர் சொன்னதால் மனமுடைந்த நடிகை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த தன்னு சிங்(23) மாடலிங், குறும்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் ராகுல் ஸ்ரீவஸ்தா, தன்னு சிங்கை ‘Bandariya'(குரங்கு) என கேலி செய்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், பெட்ரூமில் உயிரை மாய்த்துக்கொண்டாராம். யாரையும் உருவக்கேலி செய்யாதீங்க!

error: Content is protected !!