News March 23, 2024
IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
கூட்டணி அறிவிப்பு தற்போது இல்லை: பிரேமலதா

சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஜன.9-ம் தேதிக்கு முன்பாகவோ, அல்லது அதன்பின்னரோ கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். சூழ்நிலையை பொறுத்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ள அவர், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
7 ரூபாய் மட்டுமே.. தினமும் 2GB ரீசார்ஜ் ஆஃபர்

தினமும் ₹7 என்ற கணக்கில், ₹350 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். இதுமட்டுமின்றி BiTV சேவை இலவசமாக வழங்கப்படுவதால் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸை பார்த்து மகிழலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு BSNL இணையதளத்தை அணுகவும். SHARE IT
News November 13, 2025
ஷமி ஏன் அணியில் இல்லை? கேப்டன் சுப்மன் கில் பதில்!

ஷமி ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தற்போது அணியில் உள்ள பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருங்காலத்தில் ஷமி அணியில் இடம் பெறுவாரா என்பதற்கு அணி தேர்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.


