News April 15, 2024
பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
டாக்டர் Fish பற்றி உங்களுக்கு தெரியுமா?

டாக்டர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் மீன்கள் கூட நமக்கு சிகிச்சை அளிக்கும். எந்த மீன் என யோசிக்கிறீர்களா? மீன் ஸ்பாக்களுக்கு சென்றால் காலை கடிக்க விடப்படும் Garra rufa மீன்களே அவை. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. உதடுகள் மூலமே இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
News November 22, 2025
தனுஷின் திறமைக்கு ரசிகை: கீர்த்தி சனோன்

தனுஷின் திறமைக்கு நான் ரசிகை என கீர்த்தி சனோன் கூறியுள்ளார். பல படங்களை இயக்கியிருப்பதால் காட்சிகள் எப்படி திரையில் வெளிப்படும் என்ற புரிதல் தனுஷுக்கு இருப்பதாகவும், பல நுணுக்கங்களை அறிந்திருக்கும் தனுஷுடன் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்ல சீன்களை நடித்து முடித்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
புதிய பிரசாரத்தை முன்னெடுக்கும் சீமான்

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


