News April 15, 2024
பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
டெஸ்டில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி இதுவே!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு மறக்க முடியாத வடுவாக மாறியுள்ளது. டெஸ்ட் போட்டியில் ரன்களின் அடிப்படையில், இந்திய அணி அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவே. இதற்கு முன்பாக, 2004-ம் ஆண்டு ஆஸி.,க்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான தோல்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
News November 26, 2025
ஆன்லைனில் ஆடை trial பார்க்கும் சூப்பர் App

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்த ஆடை நமக்கு பிட் ஆகுமா என்ற கவலையே வேண்டாம். ‘Google Doppl’ AI ஆப் மூலம், ஆடை பிட் ஆகுமா இருக்குமா என்பதை அணியாமலேயே அறிய முடியும். உங்களுக்கு பிடித்த ஆடைகளை இந்த ஆப்பில் அப்லோட் செய்தாலே, அதை உங்களுக்கு அணிவித்து காட்டும். இதை வைத்து நாம் ஆடைகளை ஈஸியாக செலக்ட் செய்யலாம். தற்போது USA-ல் சோதனையில் உள்ள இச்செயலி, விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
News November 26, 2025
ஓபிஎஸ், டிடிவி தினகரனின் பிளான் தோல்வியா?

அதிமுக ஒருங்கிணைப்பு என்ற திட்டத்திலிருந்து செங்கோட்டையன் பின் வாங்கியதன் விளைவே மாற்றுக் கட்சியில் இணையும் முடிவு. தவெகவா (அ) திமுகவா என்பதை மட்டுமே அவர் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுவொருபுறம் இருக்க, அதிமுக ஒருங்கிணைப்பு என செங்கோட்டையன் வாயிலாக காய்நகர்த்தி வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனின் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?


