News April 15, 2024

பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

image

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

image

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News December 9, 2025

55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

image

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

News December 9, 2025

இன்று முதல் டி20: வெற்றியை தொடருமா இந்தியா?

image

SA அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, இன்று கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானது என்பதால், அதிக ஸ்கோர் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த மைதானத்தில் நடந்த SA-க்கு எதிரான 3 டி20-ல், 2-ல் இந்தியா தோற்றுள்ளது. டெஸ்ட்டில் SA-வும், ODI-ல் இந்தியாவும் வென்ற நிலையில், டி20-ல் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!