News February 10, 2026
4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Similar News
News February 19, 2026
தேர்தலில் போட்டியா? திவ்யா சத்யராஜ்

திமுக அரசு அளித்துள்ள மகளிர் உரிமை தொகை ரொம்ப நல்ல விஷயம் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், தான் தேர்தலில் வெல்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன் என கூறினார். அதேநேரம் தேர்தலில் எல்லோருடனும் சேர்ந்துகொண்டு மக்கள் பணி செய்ய உள்ளதாகவும் பேசியுள்ளார். தற்போது திமுகவின் ஐடி விங் துணை பொதுசெயலாளராக திவ்யா சத்யராஜ் உள்ளார்.
News February 19, 2026
FLASH: விலை ₹50, 000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000 முதல் அதிகபட்சமாக ₹85,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE IT.
News February 19, 2026
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்

சட்டமன்ற தேர்தல் களம் தினந்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வண்ணமாக <<19181870>>திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது<<>>. ஓராண்டுக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் ஒன்றாக இருந்த தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தற்போது எதிர் அணியில் நின்று அதிமுகவை எதிர்கொள்ள உள்ளன. புதிய தமிழகம் கட்சி மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.


